இலங்கை

யாழ் நகரிலுள்ள கடையொன்றில் பாரிய தீ விபத்து!

யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு (26-10-2023) கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சில மணித்தியாலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்னொழுக்கு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Back to top button