இலங்கை

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு; 12 உணவகங்களுக்கு பூட்டு

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். அதில் குறைபாடுகள் இனங்காணப்பட்டட 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.

பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேரிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணமும் ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவககங்களிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் இரு உணவகங்களினை சீலிட்டு மூடவும் மல்லாக நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

Back to top button