இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த பயங்கர விபத்து- 15 பேர் வைத்தியசாலையில்!

கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் கன்னந்தொட்ட பகுதியில் இன்றைய தினம் மாலை (11-09-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் எம்பிலிப்பிட்டியில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடனும் 11 பேர் சிறுகாயங்களுடனும் கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லொறியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button