இலங்கை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு விமானத்தில் நேர்ந்த சோக சம்பவம்!

நேற்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 10.35 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் -605 என்ற விமானத்திலேயே இம் மரணம் இடம்பெற்றுள்ளது. அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button