இலங்கை

இன்று கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோரவிபத்து; 15 பேரின் நிலை

இன்று காலை (திங்கட்கிழமை 25) கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Back to top button