இலங்கை

சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி

நுவரெலியா மாவட்டம், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் பலி . அத்துடன் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

டிக்கோயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து பாடசாலை மாணவர்களைச் சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது ஓட்டோ ஒன்றும் விபத்துக்குள்ளானது.வானில் பயணித்த 6 பேரும், ஓட்டோவில் பயணித்த ஒருவரும் விபத்தில் சாவடைந்தனர்.

அதேவேளை, வானில் பயணித்த 5 பேரும், பஸ்ஸில் பயணித்த 42 பேரும் காயமடைந்தனர்.விபத்துக்குள்ளான பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது. இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button