கொழும்பு துறைமுக நகரத்திலுள்ள அனைத்து உணவகங்களையும் அகற்ற நடவடிக்கை!

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் அகற்றப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசாங்கத்தின் நிதிக்குழு முன்னிலையில் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த உணவகங்கள் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் இயங்குவதாகவும் அவ்வாறே அது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் முக்கியமாக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்வாறான உணவகங்களை அமைப்பதற்கான சட்டபூர்வமான தன்மை குறித்து அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
துறைமுக நகர அபிவிருத்தியில் நாட்டின் ஏனைய பகுதிகளில் முறைசாரா கழிவுநீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 12 ஆம் திகதி அரசாங்க நிதி தொடர்பான குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.