ஆன்மிகம்

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்

வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.

அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்தில் சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார்.

அதைத் தொடர்ந்து சுக்கிரனும், செவ்வாயும் மகர ராசியில் நுழையவுள்ளன.

இப்படி மகர ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் மகர ராசியில் உருவாகவுள்ள திரிகிரக யோகமானது 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இந்த யோகம் மங்களகரமான யோகம் மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக இந்த திரிகிரக யோகத்தால் 3 ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றியைப் பெறுவதோடு, நல்ல லாபத்தையும் பெறவுள்ளார்கள்.

இப்போது மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகமானது நற்பலன்களை வழங்கவுள்ளது.

பணிபுரிபவர்களுக்கும், வணிகர்களுக்கும் இக்காலம் பிரகாசமாக இருக்கும்.

பணம் தொடர்பான திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம் | Rasipalan 2024

தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

திருமணமாகாதவர்களுக்கு இந்த யோகத்தால் நல்ல வரன் அமையும்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகமானது உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும்.

ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தாயுடனான உறவு நன்றாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு இந்த யோக காலத்தில் திறக்கும்.

முக்கியமான வேலைகள் வெற்றிகரமான முடிவடையும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம்.

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தெய்வீக பணிகளுக்கு செலவுகளை செய்வீர்கள்.

Back to top button