இரண்டு

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5 மணி முதல் மறுநாள் 25ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியவசிய பராமரிப்பு வேலைகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனவே நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களை 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

Back to top button