இலங்கை

எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (19.1.2024) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.6 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. மேலும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.10 அமெரிக்க டொலராக நிலவுகிறது. பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button