இலங்கை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, தெரிவித்தார்.

மேலும், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம், பாதுகாப்பு குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டன. மேலும் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், 800,000 அட்டைகளை இன்னும் அச்சிட வேண்டும் என்றும், நாளாந்தம் 4,000 அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button