உடல்நலம்

மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே நம்மில் பலரின் முக்கிய உணவாக காணப்படுவது சோறு. இன்னும் சொல்லப்போனால் சோறு தான் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு அரிசி சாதம் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஆனால் உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் அதிகமாக சோறு சாப்பிடுவது பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

பாதக விளைவுகள்

அரிசி மற்றும் கோதுமையை பிரதான மூலப்பொருளாக கொண்டே பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. குறிப்பாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் உடனடியாக ஆற்றலைத் தரும்.

தமிழர்களை பொருத்தவரையில் அனேகமானோர் ஒரு நாளும் சோறு சாப்பிடாமல் இருப்பதில்லை. சிலர் மூன்று வேளையும் கூட சோறு சாப்பிடுவார்கள். ஆனால் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

உடலுக்கு போதுமான நார்ச்சத்து கிடைக்காவிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகள் போற்ற கோளாறுகள் ஏற்பட ஆரம்பிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, மூன்று வேளை சாதம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல .பருப்பு வகைகள், காய்கறிகள், கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவை அனைத்தும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. எனவே வெள்ளை அரிசியை குறைவாகவே சாப்பிட வேண்டும். வெள்ளை அரிசியில் கலோரிகள் அதிகம்.

அதிக கலோரிகளை உட்கொள்வதால் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும். எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் அதிகமாக அரிசியில் செய்த உணவு வகைகளை உட்கொள்வது தான்.

எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி அரிசி சாப்பிடுவது நல்லதல்ல. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. இந்த சத்துக்களின் குறைபாடு எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு வேறு பல பிரச்சனைகளை உண்டாக்கும். தினமும் சோறு அதிகம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எப்போதும் உணவில் சமநிலை என்பது இன்றியமையாதது. எந்த உணவாக இருந்தாலும் அதை மட்டுமே தொடர்ச்சியாக சாப்பிடுவது நல்லதல்ல.

Back to top button