இலங்கை

நல்லூர் அரசடிப் பகுதியில் இதுவரை அகற்றப்படாத வீதித்தடைகள் – மக்கள் விசனம்

யாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை அகற்றப்படவில்லை இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வீதிப் போக்குவரத்துக்கு குறித்த வீதித்தடைகள் இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக
விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 15ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று நல்லூர் பகுதியில் பொதுமக்களால் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button