உலகச் செய்திகள்பிரான்ஸ்

பாரிஸில் கத்திக்குத்து தாக்குதல் – பலர் காயம்

இன்று காலை பிரான்ஸின் பாரிஸில் நபர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

பாரிஸின் கார் டு நோ (Gare du Nord) புகையிரத நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

புகையிரத நிலையத்தில் இருந்த பலர் மீது குறித்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினாரென பாரிஸ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button