இலங்கை

இலங்கைக்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த ஆபத்தான பொருள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் சுங்க பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.இத்தாலியில் இருந்து ஹோமாகம பி ரதேசத்தில் உள்ள முகவரிக்கு பொதி அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், உணவுப்பொருட்கள் என்ற பெயரில் 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் என ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போதைப்பொருட்களை மீட்க சிறப்பு தேடுதல் நடவடிக்கை கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button