ஆன்மிகம்

தண்ணீர் போத்தலை படுக்கைக்கு அருகில் வைக்கக் கூடாதாம்! காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக நாம் தூங்கம் போது பயன்படுத்தும் சில பொருட்களை படுக்கைக்கு அருகில் வைத்திருப்போம். அப்படி நாம் வைத்திருக்கும் ஒருசில பொருட்களால் நாம் நினைத்து கூட பார்க்காத பல பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு சில பொருட்களை படுக்கை அறையிலோ அல்லது படுக்கையிலோ வைத்திருப்பது உங்களுக்கு பாதகமான சில விளைவுகளை கொடுப்பதுடன் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கின்றது.

படுக்கைக்கு அருகில் வைக்க கூடாதவை
மொபைல் போன் அல்லது வாட்ச் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களுடன் ஒருவர் தூங்கக் கூடாது. இது பண இழப்புக்கு வழிவகுக்கும். மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கண்ணாடியை தலைக்கு அருகில் அல்லது படுக்கைக்கு முன் வைக்கக்கூடாது. இது திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். தூங்கும் போது கண்ணாடியில் உங்கள் நிழல் தெரியக்கூடாது. இது இரவில் பயங்கரமான கனவுகள் வருவதற்கு காரணமாக அமைகின்றது.

சிலரிடம் துவைக்காத துணிகளை படுக்கையில் வைக்கும் பழக்கம் இருக்கும். இதன் விளைவாக, கெட்ட கனவுகள் மற்றும் மோசமான சம்பவங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இது உங்களை சோம்பேறி தனமாக உணரச்செய்யும்.

தூங்கும் போது படுக்கைக்கு அருகில் பணத்தையோ உணவுப் பொருட்களையோ வைக்காதீர்கள். இது எதிர்மறை ஆற்றலை உங்களை நோக்கி ஈர்க்கச் செய்யும். மற்றும் இது லட்சுமி தேவிக்கு அவமரியாதையை கொடுப்பதாக கருதப்படுகின்றது.

சில சமயங்களில், படுக்கைக்கு அருகில், கழுவப்படாத டீ அல்லது காபி கப்பை வைத்து தூங்குகிறோம்.இப்படி படுக்கையிலோ அல்லது அறையிலோ கழுவப்படாத பாத்திரங்களை வைப்பது வறுமைக்கு வழிவகுக்கும்.அவை தூங்கும் போது கெட்ட கனவுகளை ஏற்படுத்துவதுடன் வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகின்றன.

செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள் தொடர்பான எதையும் உங்கள் தலையணையின் கீழ் வைக்க கூடாது இதுபோன்ற விஷயங்களை ஒருவர் தலைக்குக் கீழே வைத்திருப்பது வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலின் விளைவை அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற இயலாமல் போராடுவார்கள்.

தூங்குவதற்கு முன் நம்மில் பலரும் தங்க நகைகளை தலையணையின் கீழ் வைப்பது வழக்கம் தூங்கும் போது தலைக்கு அடியில் அப்படி எதுவும் இருக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இது உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தலாம்.

பொதுவாகவே அனைவரும் படுக்கைக்கு அருகில் தண்ணீர் போத்தலை வைத்திருப்பது வழக்கம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, தலைக்கு கீழ் தண்ணீர் இருந்தால் சந்திரன் பாதிக்கப்படுகிறார். எதிர்மறை, மனநல பிரச்சனைகள் ஏற்படும். எனவே, தூங்கும் முன் படுக்கைக்கு கீழே எந்த பாத்திரத்திலும் தண்ணீரை வைக்க கூடாது என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Back to top button