உடல்நலம்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன நன்மைன்னு தெரியுமா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

நெல்லிக்காயில் நம் உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி காணப்படுகின்றது.

நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.

ரத்தத்தை சுத்தப்படுத்துவதால் முகப்பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும வியாதிகள் வராமல் தடுக்கும்.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கின்றது.

அசிடிட்டி, வயிற்று உப்புச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்கிறது, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், நீரிழிவு நோயை இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால்…
அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைத்து அழகிய தோற்றத்தை பெற ழுடியும்.

நெல்லிக்காய் சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொழுப்பைக் குவிக்காமல் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் குரோமியம் நிறைந்துள்ளது இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தினமும் நெல்லிக்காய் ஜுஸ் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அதிகப்படியான வீக்கம், சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.

Back to top button