இலங்கைஇந்தியா

இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தைப் பெறவே சீனா கடன் வழங்குகிறது – இந்தியா சாடல்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா , சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து உதவிகளையும் கடன்களையும் வழங்கிவரும் நிலையில் சீனாவின் நகர்வுகள் தொடர்பில் இந்தியா குற்றங்சாட்டியுள்ளது.

அதன்படி, இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்கவே இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளுக்கு சீனா கடன்களை வழங்கியுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது குறித்து அந்த ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தென்கிழக்கு, தெற்கசியாவில் வளர்ச்சி பணிகளுக்கு கடன் என்ற பெயரில் பெரும் தொகையை சீனா வழங்குகிறது.
இதன்மூலம் இந்த நாடுகளில் – இந்து சமுத்திரப் பிராந் தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க அந்த நாடு விரும்புகிறது என்று இந்தியாவின் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் இந்திய பொலிஸ் சேவை உயர் அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடந்த மாநாட்டின் முடிவிலேயே இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button