இலங்கை
யாழில் ஏற்பட்ட வாகன விபத்தில் சாரதி படுகாயம்

யாழ் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று காலை கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.