இலங்கை

திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலநடுக்கம் நேற்று (11.11.2023) திருகோணமலை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

இக்குறித்த தகவலை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பகுதியில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளதோடு, அவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Back to top button