இலங்கை

வௌ்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27.02.2024) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Back to top button