இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.

குவைட்டில் இருந்து வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களின் பயணங்களும் தாமதமாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் விமானம் காலை 6.10 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button