இலங்கை

இந்தியாவால் இலங்கைக்கு கிடைத்த இலவச உதவி!

நாட்டுக்கு 20 இன்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. அதன்படி பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 20 டீசல் என்ஜின்களை நாட்டின் புகையிரத அமைப்பின் செயற்பாட்டுடன் நாட்டுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவற்றை இந்நாட்டில் இயக்க முடியுமா என சமீபத்தில் இந்தியா வந்த ரயில்வே துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு இன்ஜின்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக க ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Back to top button