இலங்கை

மீண்டும் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு! புதிய விலை இதோ…

நாட்டில் இன்றைய தினம் (31-10-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக உயர்ந்துள்ளது. சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Back to top button