ஆன்மிகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட்

பொதுவாகவே கிரக நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகினறது.

அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி தேவரிகளின் குருவாக கருதப்படும் குருபகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

அதே நேரத்தில், ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான் மே 19 ஆம் திகதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் குரு மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் அமர்வதால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜலட்சுமி ராஜயோகம் உருவாக போகின்றது.

அந்த வகையில் சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உருவாக்கக்கூடிய கஜலட்சுமி ராஜ யோகத்தின் மூலம் சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தையும், மகத்தான பலனை கொடுக்கும் அப்படி பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த ராசிக்காரர்கள் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

இந்த நேரத்தில், முக்கிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள். அதுமட்டுமின்றி செல்வமும் வளமும் பெருகும்.

கடகம்

கடக ராசியினர் கஜலட்சுமி ராஜயோகத்தால் எதிர்பாராத பணவரவை பெற வாய்ப்பு காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வை காணலாம். வங்கி இருப்பு அதிகரித்து இன்பமாக இருப்பீர்கள்.

முதலீடு செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும், இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தத்தை பெறலாம். சமயப் பணியால் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் கிடைக்கும்.

Back to top button