இலங்கை

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே நேரத்தில் அதிகரிப்புடன் வருமான வரி கணிசமாக உயர்த்தப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆண்டுகள் என்பதுடன் சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பல தொழில்களில் உள்ளவர்களுக்கு அவர்களின் சேவையை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும் விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Back to top button