இலங்கை

வடக்கு, கிழக்கில் அடுத்த வாரம் முன்னெடுக்கடவுள்ள ஹர்த்தால்!

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு நீதி கோரி அடுத்த வாரம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தின் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் 7 தமிழ் தேசிய கட்சிகள் நேற்றைய தினம் (06-10-2023) ஒன்றுகூடி ஆராய்ந்தனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹர்த்தாலுக்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

Back to top button