இலங்கை

நாளை பாடசாலை விடுமுறை இல்லை -கல்வி இராஜாங்க அமைச்சர்!

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தைப்பொங்கல் தினத்தை அடுத்து திங்கள் அன்று பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்படலாம் என ஆராயப்பட்டநிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Back to top button