ஆன்மிகம்

கோடீஸ்வர் ஆக இதோ அருமையான பரிகாரம்; தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்கள்

பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது.

பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தையம் சரிசெய்துவிட முடியாதா போன்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.இதற்கு இந்து சாஸ்திரத்தில் எளிய முறையில் பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் ஒரு ரூபாய் நாணயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1ரூபாய் நாணயம் எந்த ஒரு சுப நிகழ்ச்சி அல்லது அழைப்பிதழிலும் வைக்கப்படுகிறது.இந்த நாணயத்தால் வறுமையை ஒழிக்க முடியும் என்பது ஐதீகம்.

1ரூபாய் பரிகாரம்

நீங்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டாலோ அல்லது உங்கள் வேலையை இழந்துவிட்டாலோ பணம் சம்பாதிக்க எந்த வழியும் கைகொடுக்கவில்லை என்றாலோ இந்த 1 ரூபாய் நாணயம் உங்களுக்கு துணைப்புரியும்.

தூங்கும் போது இந்த நாணயத்தை தலையணைக்கு அடியில் வைக்க ஆரம்பியுங்கள். தூங்கும் போது நேர்மறை ஆற்றலை ஈர்பதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது.

ஒரு ரூபாய் நாணயத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதால் பல நன்மைகள் உள்ளன. இரவில் தூங்கும் போது சுத்தமான படுக்கையில் தலையணைக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டு மறுநாள் காலை எழுந்ததும் ஏழைகளுக்கு இந்த நாணயத்தை தானம் செய்யுங்கள்.

இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

Back to top button