உடல்நலம்

வறட்டு இருமலை விரட்டும் வீட்டு வைத்தியம்.., சித்த மருத்துவரின் கூற்று

மழைக்காலம் என்பதால் பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. வறட்டு இருமலை உள்ளிருந்து சரி செய்யக்கூடிய வைத்தியத்திற்கு, ​​​​தொண்டையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொருட்களை உட்கொள்வது மிகச்சிறந்தது. அந்தவகையில், வறட்டு இருமலை விரட்ட சித்த மருத்துவர் வரலட்சுமி எளிமையான வீட்டு வைத்தியம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

தேவையான பொருட்கள்
சித்தரத்தை- 50g
அதிமதுரம்- 50g
கடுகு- 50g
வெந்தயம்- 50g
பயன்படுத்தும் முறை
சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் இந்த 4 பொருட்களையும் வறுத்து அரைத்த பின் நன்கு ஆறவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.

இந்த பொடியை தினமும் இரண்டு வேலை அரை ஸ்பூன் எடுத்து இதை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

அல்லது இந்த பொடியை 1 டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி சாப்பிட்ட பின்பு தினமும் இரண்டு வேலை குடித்து வரலாம்.

இந்த பொடியை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட வர வேண்டும்.

தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து முழு நிவாரணம் தரும்.

இந்த பொடியுடன் ஓமவல்லி, துளசி, முசுமுசுக்கை, ஆடாதோடை இலை, திருநீற்று பச்சிலை, தும்பை இலை போன்ற இலைகளில் ஏதேனும் ஒன்றை சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

இந்த பொடியை தொடர்ந்து குடித்து வந்தாலும் வறட்டு இருமல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.

மருத்துவரின் எச்சரிக்கை கூற்று
ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது.
குளிர்ச்சியான பானங்கள் அருந்த கூடாது.
குளிர்ச்சியான ஆகாரங்கள் சாப்பிட கூடாது.
சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
மூச்சி பயிற்சி செய்ய வேண்டும்.

Back to top button