ஏனையவை

வீட்டிலேயே சுவையான மலபார் பரோட்டா செய்வது எப்படி?

இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவில் ஒன்றாகும். அதிலும் ரோட்டு கடைகளில் விற்கப்படும் பரோட்டகளுக்கு ஒரு முக்கியத்துவமே இருகின்றது.

ஆகவே வீட்டிலேயே எப்படி சுவையான மலபார் பரோட்டா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மைதா மாவு – அரை கிலோ

முட்டை – ஒன்று

பால் – 100 மில்லி

தயிர் – 50 மில்லி

தூள் உப்பு

சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய் தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

பின் தண்ணீர் தேவையானளவு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளுக்கு வீசி மடித்து எடுக்கவும்.

பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

இறுதியாக கைகளில் வைத்து அடித்து பரிமாறினால் சுவையான மலபார் பரோட்டா ரெடி!

Back to top button