உடல்நலம்

கிராமத்து ஸ்டைலில் சளி, இருமலை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி?

மழைக்காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இந்த தூதுவளை ரசம் சளி, இருமலுக்கு நிவாரணமளிக்கும். தூதுவளை, நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும். ஆரோக்கியம் நிறைந்த இந்த தூதுவளை ரசம் கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தூதுவளை- 1கப்
பூண்டு- 6 பல்
சின்ன வெங்காயம்- 6
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகு – 1ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
ஒரு வாணலில் நெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்ததாக பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.

அதோடு மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

பின் தூதுவளையை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கொதித்து எடுத்துக்கொள்ளவும்.

பின் தாளிக்க கடாய் வைத்து நெய் ஊற்றி கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான தூதுவளை ரசம் தயார்.

Back to top button