ஏனையவை

தித்திப்பான தேங்காய் பாயாசம் செய்வது எப்படி?

பொதுவாகவே அனைவருக்கும் இனிப்பு வகை என்றாலேயே அதிகமாக பிடிக்கும். அதிலும் வடை பாயசத்தோடு விருந்தென்றால் எப்போதும் தவறாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

பெரும்பாலும் பாயாசத்தை அனைவரும் சாப்பிடுவார்கள். அதிலும் பாயாசத்தை ஒவ்வொரு பொருட்களை வைத்து செய்வது வழக்கம். ஆகவே தேங்காய் மட்டும் வைத்து எப்படி சுவையான தேங்காய் பாயாசம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி அல்லது வேறு அரிசி – 1/2 கப்

தண்ணீர் – 3 கப் அல்லது தேவையான அளவு

வெல்லம் – 1 1/2 கப்

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

கெட்டியான தேங்காய் பால் – 2 கப்

நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துண்டுகளாக்கப்பட்டது)

செய்முறை
முதலில் மிக்ஸியில் அரிசியை அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி உருக்கி அதை வடிக்கட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

பிறகு அதில் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி குறைவான தீயில் 30-35 நிமிடம் அரிசியை வேக வைக்கவும்.

பின் வேக வைத்த அரிசி குலைந்தவுடன், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட், வெல்லப் பாகு சேர்த்து நன்கு கிளறி விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் 10 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி விட வேண்டும்.

இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதங்கி, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பின் அதை பாயாசத்தின் மேல் ஊற்றி கிளறி எடுத்தால் சுவையான தேங்காய் பாயாசம் ரெடி!

Back to top button