இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு நீர் விநியோக தடை குறித்து முக்கிய அறிவிப்பு

கொழும்பு – நகரின் சில பகுதிகளில் நாளையதினம்(09) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. இதன்படி, நாளை(09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம்(10) காலை 9 மணி வரை நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.

Back to top button