இலங்கை

வடக்கிற்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

அரசாங்கம் வட மாகாணசபைக்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மாகாணசபை முதலமைச்சர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் அடங்கிய அறிக்கைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், 13ஆவது திருத்தம் மற்றும் வடமாகாணசபை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவது குறித்து வினவிய போது, எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியப் பிரதமரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும், அதில் அரசாங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button