இலங்கை

மின் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இலங்கை மின்சார சபை, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும், தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்யப்படுகிறது.

மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு
இந்நிலையில் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் தற்போது செயலிழந்துள்ளன. எனினும் மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லை. பராமரிப்பு காலத்தில், அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Back to top button