இலங்கை

நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டப்பணம் செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

தண்டப்பணம் செலுத்த வேண்டிய இடங்கள்
இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹவலோக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, பத்தரமுல்ல, கல்கிஸ்ஸ, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய தபால் நிலையங்களில் 24 மணிநேரமும் தண்டப்பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

Back to top button