இலங்கை

மன்னாரில் காணாமல் போன சிறுமி தொடர்பில் வெளியான தகவல்!

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் காணாமல் போன ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி நேற்று (19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மாணவி ரிகாஷா வியாழக்கிழமை (18) காலையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் குறித்த மாணவி கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவி காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், மாணவி நேற்று புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button