ஆன்மிகம்

நீங்க செவ்வாய்கிழமை இந்த பரிகாரம் செய்தால் போதும்..! உடனே சொந்த வீடு வாங்கிருவீங்க

பொதுவாகவே அனைவருக்கும் சொந்த வீடு வாங்குவது என்றால் ஒரு கனவாகும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அது தள்ளிப்போகும். எனவே சொந்த வீடு கட்ட விரும்புபவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அதில் செவ்வாய்கிழமை அன்று செய்யும் பரிகாரமானது சிறந்த பலனை கட்டாயம் வழங்கும். சொந்த வீடு கட்ட விரும்புபவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். செய்வாய் பகவனால் மாத்திரமே சொந்த வீட்டை வாங்கும் யோகத்தை வழங்க முடியும்.

செவ்வாய் கிழமை பரிகாரம்
செவ்வாய்க்கு அதிபதி கடவுள் முருகப் பெருமான். செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.

பின் வீட்டுக்கு சென்று வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் சாப்பிட்டு, விரதத்தை தொடரவும்.

மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 9 செவ்வாய்கள் விரதம் இருந்தால் வீடு கட்டும் யோகம் தேடி வரும்.

நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வந்து வணங்கினால் வீடு யோகம் வரும்.

துவரம் பருப்பை தானம் செய்பவர்களுக்கு செவ்வாய் அருள் கிடைக்கும். ஆகவே சொந்த வீட்டை உடனடியாக கட்டலாம்.

ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து சிறுவாபுரி முருகன் கோயில் சென்று வழிபட வேண்டும்.

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். அதோடு வாடகை வீட்டில் இருந்தால் உடனடியாக சொந்த வீட்டிற்கு மாறிடலாம்.

புல்லாங்குழலை வீட்டில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெருகும். சொந்த வீடு வாங்கவும், சொந்த வீட்டில் வசிப்பவர்களும் மகிழ்ச்சியோடு இருக்கவும் இது உதவும்.

Back to top button