இந்தியாஇலங்கை

சுற்றுலா சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சியில் திடீர் மரணம்!

சுற்றுலா பயணம் மேற்கொண்டு திருச்சிக்கு சென்றிருந்த இலங்கையர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வேல்வரதன் வயது -45 என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மயங்கி விழுந்தவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்ப்பித்தபோதும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இவர் திருச்சியில் அவரது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமானநிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button