ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நன்மை செய்வார்!

ஒன்பது கிரகங்களில் ‘சனி பகவான்’ மிகவும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான கிரகம் ஆகும். அவர் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு நீதிபதியாக செயல்பட்டு அதற்கேற்ப நல்ல மற்றும் கெட்ட முடிவுகளை வழங்குகிறார். அதனாலேயே பெரும்பாலான மக்கள் சனிபகவானை நினைத்து அஞ்சுகின்றனர். சனி ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுவது மட்டும் அன்றி பெரும்பாலான மக்கள் சனிபகவானின் ஆபத்தான பார்வையின் கீழ் வர வர அஞ்சுவார்கள். ஆனால் இது சரியான புரிதல் அல்ல. அந்தந்த ராசியில் பிறந்தவர்களின் செய்யும் செயல்களுக்கான பலன்களை மட்டுமே சனிபகவான் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. சனி பகவான் தவறான செயலுக்காக யாரையாவது தண்டிப்பது அவர்களை தூய்மையானவராக மாற்ற மட்டுமே என்று கூறப்படுகிறது.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி எனவே அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட ராசிகளில் இவ் ராசியினர் முதலிடத்தில் இருக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் சனிபகவானின் தீவிரமான பார்வைக்கு கீழ் சென்றாலும் அவரின் குறைந்தபட்ச பாதகமான விளைவுகளை மட்டுமே பெறுகிறார்கள். இவ் ராசியினர் வலுவான பகுத்தறிவு மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் சனியின் அருளால் அவர்களின் பணியிடத்தில், வணிகத்தில் அல்லது அரசியலில் எப்போதும் ஏற்றம்.

ரிஷபம்

இவ் ராசியினர் அன்பின் கிரகமான சுக்ரனால் ஆளப்படுவதோடு சுக்ரனும், சனிபகவானும் நட்பு கிரகங்கள். இதன் விளைவாக சனி எப்போதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பார் மற்றும் சாதகமான பலன்களை வழங்குகிறார். சுக்கிரனின் மற்றும் சனி பகவான் ஆசீர்வாதத்துடன் இணைந்து ரிஷப ராசிக்காரர்கள் விரைவில் வாழ்க்கையில் உச்சம் பெறுவார்கள். மேலும் அதிகபட்ச வெற்றி, செழிப்பு, புகழ், மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

துலாம்

துலாம் என்பது சனிபகவானுக்கு மிகவும் பிரியமான ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர் எப்போதும் துலாம் ராசியில் உயர்ந்த நிலையில் இருக்கிறார். இவ் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருளும், ஆசியும் கிடைக்கும். அவர்களுக்கு மகத்தான வெற்றி, பணம், புகழ் மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறார் சனிபகவான். சனிபகவான் அவர்கள் பெரிய உயரங்களை அடைய உதவுகிறார்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சனி கிரகத்தின் அருளைப் பெறுவார்கள் அதனால் அவர்கள் வாழ்க்கையில் தொல்லைகள் குறையும். கடக ராசிக்காரர்கள் வியாழனின் 2, 5, 9 மற்றும் 12 ஆம் வீடுகளில் சனி இருக்கும்போது கலை, எழுத்து, பத்திரிகை மற்றும் அரசு வேலைகள் போன்ற படைப்புத் துறைகளில் மகத்தான வெற்றி, மரியாதை மற்றும் செல்வத்தைப் பெறுவார்கள். இவ் ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் குடும்பம் மற்றும் பெற்றோரை நன்றாக ஆதரிப்பார்கள். இந்த குணாதிசயங்கள் அவர்களுக்கு மகத்தான வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.

கும்பம்

இந்த ராசிக்கு அதிபதியாக இருப்பதால் சனிபகவான் தனது ஆசீர்வாதத்தையும் அருளையும் எப்போதும் அவர்கள் மீது பொழிகிறார். கும்ப ராசிக்காரர்கள் சனிபகவானின் அருளால் பணம் மற்றும் புகழுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது அரிது. இவ் ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள். அவர்கள் சரியான பாதையில் இருந்தால் சாதாரண உழைப்பால் கூட பெரிய வெற்றி, புகழ், அன்பு மற்றும் மரியாதையைப் பெறுவார்கள். சனிபகவானின் அருளால் எதிர் பாலினத்தவரின் பாசத்தையும் ஆதரவையும் அவர்கள் எளிதில் பெறுகிறார்கள்.

Back to top button