ஆன்மிகம்

குரு பகவானால் சிகரம் தொட போகும் 3 ராசிக்காரர்கள்: எந்தெந்த ராசிகள் தெரியுமா?

குரு பகவான் வக்ரமாக பயணம் செய்து வருகிறார். குருபகவான் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார்.

குருபகவான் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக வரும் 2024 ஆம் ஆண்டு சில ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது.

குரு பகவானின் அஸ்தமனத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட உள்ளது. இருப்பினும் இதில் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். எந்தெந்த ராசிகள்? 

மேஷ ராசி

குருபகவான் மேஷ ராசி காரர்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது மன வரவில்லை என்று குறையும் இருக்காது. சுப காரியங்கள் நடக்கும்.

மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல லாபத்தில் செயல்படும். 

கடக ராசி

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி தடைகளை நீக்கி கொடுக்க போகின்றார்.

எந்த வேலை தொடங்கினாலும் அது சுகமாக முடியும். நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் பாராட்டு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சிம்ம ராசி

அடுத்த ஆண்டு குருபகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்த சிக்கல்களும் இருக்காது.  

Back to top button