ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசியினர்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் தை மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 10.02.2024, சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.34 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. இன்று அதிகாலை 12.23 வரை திருவோணம். பின்னர் இரவு 10.53 வரை அவிட்டம். பின்பு சதயம். இன்று அதிகாலை 01.50 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்ததை விட இருமடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள். ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வீர்கள். நிலம் விற்ற பணத்தில் நகை வாங்குவீர்கள். வெளிவட்டார உதவிகளை சரளமாக பெறுவீர்கள். நீண்டநாள் பகையை நீக்கி உறவை மேம்படுத்துவீர்கள். வெளியூர்ப் பயணத்தில் சிறப்படைவீர்கள்.

ரிஷபம் தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். சிக்கலான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தையை திருப்திகரமாக முடிப்பீர்கள். உறவினர்களின் உதவியால் உத்வேகம் பெறுவீர்கள். உயரதிகாரிகள் ஊக்கம் கொடுப்பார்கள். பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம் ஆன்லைனில் பணம் அனுப்பும்போது எண்கள் சரிதானா என்பதை இருமுறை பார்த்துக்கொள்ள தவறாதீர்கள். மனைவியின் குத்தல் பேச்சால் மனம் உடைந்து போவீர்கள். பைக்கில் வெளியே கிளம்பும்போது பெட்ரோல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கண்ட இடத்தில் வேளை தவறி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

கடகம் நடக்கும் தொழிலை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் வியாபாரிகள் விசனம் அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். பேச்சு வார்த்தைகளில் கவனத்தை கையாள மறக்காதீர்கள். வீண் கெட்ட பெயர் எடுக்காதீர்கள். வீட்டில் விவாதங்களில் இறங்காதீர்கள். காதலியின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம் மனைவி மக்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வதால் நிம்மதி அடைவீர்கள். வேலைத் திறமையால் உற்பத்தியை அதிகரிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தந்தையை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் தொல்லைகள் துரத்துவதால் துயரப்படுவீர்கள். இருப்பினும் பொருளாதாரத் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் ஏற்றமான பலன்களை அடைவீர்கள். எதிரிகள் செய்யும் இடையூறை புத்திசாலித்தனத்தால் முறியடிப்பீர்கள்.

துலாம் ‘என்னடா வாழ்க்கை’ என்று மனச்சோர்வு அடைவீர்கள். நன்றி மறந்த மனிதர்கள் மீது கோபப்படுவீர்கள். வீட்டில் நகைச்சுவையாகப் பேசுவதை நிறுத்துங்கள். அது குதர்க்கத்தில் கொண்டுபோய்விடும். திட்டமிட்டு காரியம் செய்யுங்கள். நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் கடனை அடைக்க முடியாமல் கவலைப்படுவீர்கள்.

விருச்சிகம் செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். வியாபாரம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். கடினமான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். புதிதாக ஸ்கூட்டி வாங்குவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை பொறுப்பாக வாங்கிப் போடுவீர்கள்.

தனுசு குடும்பத்துடன் குதூகலமாக வெளியூர்ப் பயணம் செய்வீர்கள். புதிய ஆடை அணிமணிகளை வாங்கி குஷிப் படுத்துவீர்கள். உங்களிடம் போட்டி போட நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். தொழிலில் முன்னேற்றம் அடைந்து உறவினர்களை வியக்க வைப்பீர்கள். நயவஞ்சக நட்புகள் உங்களை விட்டு விலகுவதால் சந்தோஷம் அடைவீர்கள். பந்தயங்களில் லாபம் பெறுவீர்கள்.

மகரம் உங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். பணத் தேவைக்காக கடன் வாங்க தயங்க மாட்டீர்கள். சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல இடம் அமையும். கையில் இருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கிடைக்கும் லாபத்தில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

கும்பம் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கண்ணாடி அணிந்து கொள்ள தவறாதீர்கள். கண் வலி ஏற்பட்டு கஷ்டப்படுவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருங்கள். அதிகப் பிரசங்கித்தனமாக எதிலும் தலையிடாதீர்கள். வாகனங்கள் பழுதாகி சிரமத்தை அடைவீர்கள். வெளியூர்ப் பயணத்தில் சாதகமான பலனை அடைய முடியாமல் சங்கடப்படுவீர்கள்.

மீனம் ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்தாலும் எண்ணிப் பார்க்க மறக்காதீர்கள். நகைகளை கண்ட இடத்தில் கழற்றி வைக்காதீர்கள். சின்ன பயல்களோடு சவகாசம் வைத்துக் கொள்ளாதீர்கள். கணக்குகளை மறக்காமல் எழுதி வையுங்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டைச் சரி பாருங்கள். மனதில் தோன்றுவதை பேசி மனத்தாங்கல் அடையாதீர்கள். குறிப்பறிந்து நடந்து உறவினர்களிடம் அன்பை பேணுவீர்கள்.

Back to top button