இலங்கை

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து!

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (ஞாயிற்று கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமக்கு நம்பிக்கை இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார்.

எந்த காலப்பகுதிக்குள் எங்கே எந்த இடங்களில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என கூறவில்லை மாறாக 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது

உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என எம் .ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்,தெரிவித்துள்ளார்.

Back to top button