இலங்கை

மகிந்தவின் மின்கட்டணம் தொடர்பிலான கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷ மின்சாரக் கட்டணத்தை கணிசமான சதவீதத்தினால் அதிகரிப்பதை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பது , கடந்த காலம் முழுவதும் வரி மற்றும் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஓகஸ்ட் மாதம் மின் கட்டணம் 76% அதிகரிக்கப்பட்டது.

மின்கட்டண அதிகரிப்பு இந்த நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வர்த்தக சமூகத்துக்கும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாங்கம் இதனை மாரு பரிசீலனை செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button