இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலிருந்து வெளியேறியுள்ள பலர்: வெளியான தகவல்

கடந்த இரண்டு வருடங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சுமார் 160 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 250 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதாக அதன் விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கூற்றுப்படி, 415 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சேவையில் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 70,000 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் விமான தொழில்நுட்ப வல்லுநர் பணிபுரிய முடியும் எனவும், அதிகபட்ச சம்பளம் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா வரை பெற முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் விமான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 10 இலட்சம் ரூபா உயர் சம்பளம் கோருவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Back to top button