ஆன்மிகம்

செவ்வாய் பெயர்ச்சி.. பண மழையில் நனையப் போகும் 5 ராசிக்காரர்கள்

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

அந்த வகையில், நவகிரகங்களின் அதிபதியாக செவ்வாய் பகவான் பார்க்கப்படுகிறார். இவரின் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகள் கிடைக்கும்.

வழக்கம் போல் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை பெயர்ச்சியடைவார். இவருடைய இடமாற்றத்தால் ராசிகளின் பலன்களில் மாற்றம் ஏற்படும்.

இதன்படி, செவ்வாய் பகவான் பெயர்ச்சியால் பெப்ரவரி 5 முதல் மகர ராசியில் பயணம் செய்கிறார். இதனால் எந்தெந்த ராசியில் என்னென்ன பலன்கள் என தொடர்ந்து பார்க்கலாம்.

அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்

  1. மகர ராசி

மகர ராசி சனி பகவானின் சொந்த ராசி என கூறப்படுகின்றது. இந்த ராசியில் சூரியன் மற்றும் புதன் பகவான் ஆகிய இருவரும் பயணம் செய்து வருகின்றனர். தற்போது செவ்வாய் பெயர்ச்சியும் இந்த ராசியில் இடம்பெற்றுள்ளது. இதனால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

  1. மேஷ ராசி
    செவ்வாய் பகவான் பெயர்ச்சியால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூட போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்து வைத்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் மகிழ்ச்சிக்கரமான சூழல் நிகழும்.
  1. ரிஷப ராசி
    மன தைரியம் கொண்ட ராசியாக ரிஷப ராசிக்காரர்கள் பார்க்கப்படுகின்றார்கள். இவர்களின் கடின உழைப்பு இன்று முதல் பலன் தரும். குடும்பத்தில் இருந்த தேவையற்ற சிக்கல்கள் மறைய போகின்றது. உடல் மாத்திரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவு வழமைக்கு மாறாக அதிகரிக்கும்.
  2. கடக ராசி
    செவ்வாய் பகவான் கடக ராசிக்கு மகிழ்ச்சியை பரிசாக கொடுக்க போகிறார். இதுவரையில் நிதி கிடைக்காமல் கஷ்டப்படும் ராசிக்கார்கள் இன்று முதல் அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. உடல் நிலை குறைவால் அவஸ்தைப்படுவர்களுக்கு சீக்கிரமாக நற்செய்தி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதியான வாழ்க்கை அமையும்.
  1. கன்னி ராசி
    பல ஆண்டுகளாக நீங்கள் நினைத்த காரியம் இந்த வருடம் நடக்கப் போகின்றது. பணத்தை அள்ளிக் கொடுக்க போகிறார். வேலையில் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நீண்ட தூர பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

எதிர்பாராத நேரத்தில் ஆதாயம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவுகள் பலப்படும். இவ்வளவு நாள் நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நீங்கள் நினைத்து வைத்த வாழ்க்கை கிடைக்கும். செவ்வாயின் ஆதிக்கத்தை கண்டிப்பாக பெறுவீர்கள்.

Back to top button