இலங்கை

நாளை இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்!

நாளை சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தாதியர் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வரைவை இரகசியமாகத் தயாரித்துள்ளதாகத் கூறியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டின் சுகாதார அமைப்பில் காணப்படும் குறைபாடுகளைச் சரி செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button