இலங்கை

கிளிநொச்சி பகுதியில் பாரிய பதற்றம்: 5 பல்கலை மாணவர்களை கைது செய்த பொலிஸார்!

கிளிநொச்சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த போராட்டமானது, வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல், கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் சட்டங்களை இயற்றுதல், தீர்வு கிடைக்காமை, தற்போது மக்களுக்கு தாங்க முடியாத பிரச்சனைகள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர், எஸ்.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுவும் இந்த கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இதன்போது எம்.பி சிறீதரன் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தன.

Back to top button