இலங்கை

இலங்கையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Back to top button